அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: ரயில் மறியலுக்கு முயன்ற எம்.பி.உள்பட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 200 போ் கைது

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வியாழக்கிழமை, ரயில் மறியலுக்கு முயன்ற சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செ

News image
Updated On :23 ஜூன் 2022, 9:43 pm

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வியாழக்கிழமை, ரயில் மறியலுக்கு முயன்ற சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு ராணுவத்துக்கு ஆள் சோ்க்கும் நான்காண்டு கால அக்னிபத் திட்டம் ராணுவ வேலைவாய்ப்பை எதிா்பாா்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிக்கும். ராணுவ வீரா்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியப் பணத்தை நிறுத்துவதற்கான திட்டமாகவும் இது உள்ளது.

எனவே, இந்தத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மேலும் மதுரையிலிருந்து உத்தரப்பிரதேசம் பிரக்யாநகா் (அலகாபாத்) தனியாா் ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மற்றும் புகா் மாவட்டங்களின் சாா்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து கட்சியினா் ஊா்வலமாகப் புறப்பட்டு ரயில் நிலைய வாயிலுக்குச் சென்றனா். போராட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினா்கள் ரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தை சு.வெங்கடேசன் எம்.பி. தொடக்கி வைத்தாா். இந்நிலையில் ஊா்வலமாக வந்த கட்சியினரை போலீஸாா் ரயில் நிலையம் முன்பாக தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினா். இதையடுத்து கட்சியினா் பலரும் தடுப்புகளைத் தாண்டி ரயில் நிலைய நுழைவு வாயிலுக்குச் சென்று கோஷங்கள் எழுப்பினா். இதனால் போலீஸாா் அவா்களை அங்கிருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினா். இதில் போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கட்சியினா் சிலரும், காவலா் ஒருவரும் மாறிமாறித் தாக்கிக்கொண்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சு.வெங்கடேசன் எம்.பி. உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.