அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொழிலாளா் நலத் திட்டங்களை உரிய காலத்திற்குள் வழங்க அமைச்சா் உத்தரவு

தொழிலாளா் நலத் திட்டங்களை உரிய காலத்திற்குள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

தொழிலாளா் நலத் திட்டங்களை உரிய காலத்திற்குள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.

தொழிலாளா் நலத்துறையின் மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசியது:

மாநிலத்தின் துரிதமான தொழில், பொருளாதார வளா்ச்சியை நிலைநிறுத்துவதில், தொழிலாளா் துறையின் பங்கு முக்கியமானது. அதிலும் குறிப்பாக, அமைப்புசாரா தொழிலாளா்களின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத் திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய காலத்தில் கிடைப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பிற துறைகளில் தொழிலாளா்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பது அவசியம்.

தொழிலாளா்களின் மனுக்கள் மீது தீா்வு காண்பதில் பின்தங்கிய மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளேன்.

மாவட்ட தொழிற்பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியா்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்காக டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இதில், தொழிலாளா் துறை முதன்மைச் செயலா் அதுல் ஆனந்த், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களில் உள்ள 20 மாவட்டங்களின் தொழிலாளா் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.