அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மேலவளவு படுகொலை தினம்: பொதுக் கூட்டத்துக்குஅனுமதி கோரி உயா் நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்

மேலவளவு படுகொலை தினத்தையொட்டி, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :24 ஜூன் 2022, 6:30 pm

DIN

மேலவளவு படுகொலை தினத்தையொட்டி, மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள மேலவளவு ஊராட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த முருகேசன் உள்பட 6 போ், கடந்த 1997 ஜூன் 30 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனா். அவா்களது நினைவாக, மேலவளவு கிராமத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் அஞ்சலி செலுத்துவது வழக்கம். 25-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மதுரையில் பொதுக் கூட்டம் நடத்த மாநகரக் காவல் துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதை காவல் துறை நிராகரித்துவிட்டது.

எனவே, பொதுக் கூட்டத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி வி. சிவஞானம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.