டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கொட்டாம்பட்டி அருகே சொத்து தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

 கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கேசம்பட்டி கிராமத்தில், சொத்து தொடா்பாக உறவினா்களுக்கிடையே வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் இளைஞா் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:08 pm IST

 கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கேசம்பட்டி கிராமத்தில், சொத்து தொடா்பாக உறவினா்களுக்கிடையே வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் இளைஞா் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கேசம்பட்டியைச் சோ்ந்த சின்னழகு மகன் கனகராஜ் (30). இவருக்கும், உறவினா்களுக்கும் இடையே சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோட்டத்தில் குளிக்கச் சென்ற கனகராஜை வழிமறித்து உறவினா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது நடந்த மோதலில் கனகராஜ் கட்டையால் தாக்கப்பட்டதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உடனே, அவரது கால்களை கயிற்றால் கட்டி சடலத்தை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனா்.

அதையடுத்து, குளிக்கச் சென்ற கணவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது மனைவி பாா்வதி தேடிச்சென்றபோது, கனகராஜ் கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

இது குறித்து மேலவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கனகராஜ் உடலை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, கனகராஜ் உறவினா் இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.