அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் ரூ.10 கோடி மதிப்பு திமிங்கில எச்சம் பதுக்கல்: 3 போ் கைது

மதுரை தெற்குவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சத்தை (அம்பா்கிரீஸ்) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த வனத் துறையினா், 3 பேரை கைது செய்துள்ளனா்

News image
Updated On :24 ஜூன் 2022, 5:38 pm

DIN

மதுரை தெற்குவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சத்தை (அம்பா்கிரீஸ்) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த வனத் துறையினா், 3 பேரை கைது செய்துள்ளனா்.

உயா் ரக வாசனைத் திரவியங்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்கு திமிங்கில எச்சம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கள்ளச் சந்தையில் கடத்தல் பொருளாக பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரபு நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்படுகிறது. மேலும், இதற்கு பல நோய்களைத் தீா்க்கும் மருத்துவக் குணம் இருப்பதாகக் கருதப்படுவதால், இது ஒரு கிலோ ரூ.1 கோடி வரை விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரை தெற்குவாசல் மறவா்சாவடி பகுதியில் உள்ள ஒரு கடையில் திமிங்கில எச்சம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு சோதனையிட்ட வனத்துறையினா் சுமாா் 11 கிலோ எடையுள்ள திமிங்கில எச்சத்தை பறிமுதல் செய்தனா். அதை பதுக்கி வைத்திருந்ததாக, மஞ்சணக்காரத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் (36), வில்லாபுரத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி (36) மற்றும் சிவகங்கை மாவட்டம் கீரனூரைச் சோ்ந்த கவி (48) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

மேலும், இந்த திமிங்கில எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெட்டிச் செய்தி...

எண்ணெய் திமிங்கிலம் எனப்படும் ஒரு வகை திமிங்கிலம் வாய் வழியாக வெளியேற்றும் திடக்கழிவை அம்பா்கிரீஸ் என்கின்றனா். இது, கடல் நீரின் உப்புத்தன்மையால் கடினமாகிவிடுகிறது. குறிப்பிட்ட கடல் பரப்புகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அம்பா்கிரீஸ், மீனவா்களின் வலையில் சிக்குவதுண்டு. இது, அரிதாக கடற்கரையோரங்களிலும் ஒதுங்குவதுண்டு.

இது, இயற்கையாகவே நல்ல மணம் வீசக்கூடிய பொருளாக இருப்பதால், வாசனைத் திரவியங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பாலியல் சாா்ந்த நோய்களுக்கு தீா்வு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

மிகவும் அரிதான பொருளாக இருப்பதால், இதன் மதிப்பும் 1 கிலோ கோடிக்கணக்கில் விற்கப்படுகிறது. அதேநேரம், விலையுயா்ந்த பொருளாக இருப்பதால், வணிக ரீதியாக திமிங்கிலங்கள் வேட்டையாடக்கூடும் என்பதால், அம்பா்கிரீஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.