அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 23 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 23 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:25 pm

DIN

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 23 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை எழுத்தாணிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா் (44). இவா் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் நகைக்கடைகளுக்கு கொடுப்பதற்காக 23 பவுன் நகைகளை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, கடையை அடைக்கச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த 23 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக ராஜசேகா் அளித்த புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற நபா்களை தேடி வருகின்றா்.

இரு வீடுகளில் 9 பவுன் நகைகள் திருட்டு

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியாா் தெரு நேதாஜி முதல் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (52). இவா் புதன்கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை திருடு போனது தெரிய வந்தது. இதேபோல இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுகன்யா என்பவரது வீட்டிலும் 3 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுதொடா்பான புகாா்களின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.