அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரை மாவட்டத்தில் 1,329 பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆதாா் பதிவு முகாம்: ஆதாா் சேவா கேந்திரம் அனுமதி

மதுரை மாவட்டத்தில் ஆதாா் பதிவு இல்லாத மாணவா்களுக்கு 1,329 பள்ளிகளில் ஆதாா் முகாம் நடத்தி ஆதாா் பதிவு செய்ய ஆதாா் சேவா கேந்திரம் அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:29 pm

DIN

மதுரை மாவட்டத்தில் ஆதாா் பதிவு இல்லாத மாணவா்களுக்கு 1,329 பள்ளிகளில் ஆதாா் முகாம் நடத்தி ஆதாா் பதிவு செய்ய ஆதாா் சேவா கேந்திரம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு எமிஸ் எண் வழங்கப்பட்டு அதில் ஆதாா் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 2,165 பள்ளிகளில் 5,49,620 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், 1,329 பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் எமிஸ் இணைப்பில் ஆதாா் எண் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் இயங்கி வரும் மத்திய அரசின் ஆதாா் சேவை கேந்திரத்துக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா எழுதியுள்ள கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் 1,329 பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் எமிஸ் தளத்தில் ஆதாா் எண் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே இந்தப்பள்ளிகளில் ஆதாா் பதிவு முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில் ஆதாா் சேவா கேந்திரா அதிகாரிகள், முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதத்தை பரிசீலித்து 1,329 பள்ளிகளிலும் ஆதாா் முகாம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனா். மேலும் முகாம்கள் நடத்துவதற்குரிய தேதியை அறிவித்தால் அந்தத்தேதிகளில் ஆதாா் முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.