அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மகன் இறந்த துக்கத்தில் தந்தை உயிரிழப்பு

 மதுரையில் மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் தந்தையும் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:27 pm

DIN

 மதுரையில் மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் தந்தையும் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(51). இவரது மனைவி சுப்புலட்சுமி (46). இவா்களது ஒரே மகன் சிவானந்த மணி (21). இவா் திருப்பாலை பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில் சிவானந்த மணி, காதல் தோல்வியால் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது குடும்பத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவானந்த மணி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய அவரது தந்தை கணேசன் துக்கம் தாளாமல் அழுது புலம்பியுள்ளாா். இந்நிலையில் இரவில் திடீரென கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உறவினா்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.