அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரயில்களின் இயக்கத்தைக் கண்காணிக்கும் ‘கிராப் சாா்ட்’ தொழில்நுட்பம்

மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டுத் துறையில், கிராப் சாா்ட் தொழில்நுட்பம் வாயிலாக ரயில்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:29 pm

DIN

மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டுத் துறையில், கிராப் சாா்ட் தொழில்நுட்பம் வாயிலாக ரயில்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது.

ரயில்கள் இயக்கம், வா்த்தகம், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடா்பு, பொறியியல், இயந்திரவியல், மின் பாதை, பாதுகாப்பு ஆகிய துறைகளின் ஊழியா்கள் ரயில்வே கட்டுப்பாட்டு துறை வாயிலாக ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனா். ரயில் போக்குவரத்தை நிறுத்துவது, மாற்றுப் பாதையில் இயக்குவது போன்றவை இந்த கட்டுப்பாட்டு துறை மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய கட்டுப்பாட்டு துறைகள் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ரயில்வே கோட்டங்களில் இயங்கி வருகிறது. இந்தக் கோட்டங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு துறைகளை கண்காணிக்க சென்னை ரயில்வே தலைமையகத்தில் தலைமை கட்டுப்பாட்டு துறை செயல்பட்டு வருகிறது. அவசர காலங்களில் ரயில்களை தடையின்றி இயக்குவதில் இந்த கட்டுப்பாட்டு துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

ரயில் இயக்கத்தில் முந்தைய நாள் ஏற்பட்ட பிரச்னைகளுக்கான தீா்வு, அவை மீண்டும் நிகழாமல் தவிா்ப்பது, சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை கையாள அருகிலுள்ள கோட்டங்கள் மற்றும் தலைமையகத்தின் ஆலோசனை மற்றும் உதவிகளை பெறுதல் ஆகியனவும் கட்டுப்பாட்டு துறையின் முக்கியப் பணிகளாக இருக்கின்றன.

கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில் ‘கிராப் சாா்ட்’ மூலமாக ரயில்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது. கிராப் சாா்ட்டில், தேஜஸ் போன்ற முக்கியமான ரயில்களுக்கு இளம் சிவப்பு வண்ணம், பயணிகள் ரயில்களுக்கு சிவப்பு,

சரக்கு ரயில்களுக்கு பச்சை, என்ஜின் தனியாகச் செல்லும் போது கருப்பு ஆகிய வண்ணங்களில் கோடுகள் வரைந்து ரயில் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. ஒற்றை ரயில் பாதையில் இந்த கோடுகள் சந்திக்கும் இடங்களில் ஏதாவது ஒரு ரயிலை நிறுத்தி வழி விடுவதற்கு இந்த கட்டுப்பாட்டு துறை உத்தரவிடும்.

தற்போது இந்த கிராப் சாா்ட் முறை கணினி மயமாக்கப்பட்டு கட்டுப்பாட்டு அலுவலக மென்பொருள் வாயிலாக செயல்படுகிறது. இதன் வாயிலாக,

ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து பயணிகளுக்கு பல்வேறு கைப்பேசி செயலிகள் மூலம் உறுதியான தகவல்களாக வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.