அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தோட்டக்கலைத் துறை திட்டங்களுக்கு இணையவழிபதிவு கட்டாயம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தோட்டக்கலைத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:21 pm

DIN

தோட்டக்கலைத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையால் நிகழ் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றுக்கான பயனாளிகள் தோ்வு நடைபெற்று வருகிறது. இதுவரை பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு மட்டும் பயனாளிகள், இணையவழியில் பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது நடப்பு நிதியாண்டு முதல் தோட்டக்கலைத் துறை செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் இணையவழிப் பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான திட்டங்களுக்கு என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்காலம். நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு

என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயிகள் தங்களது ஆதாா் எண், கைப்பேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்து, தோட்டக்கலைத் துறையின் திட்டங்களை அறிந்து கொள்வதோடு, அத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மதுரை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.