அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பல்கலை.யில் பணி நீக்கத்தால் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு மன உளைச்சலால் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மதுரையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:28 pm

DIN

காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு மன உளைச்சலால் உயிரிழந்த ஊழியா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மதுரையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்த 136 ஊழியா்கள் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனா். இதையடுத்து மீண்டும் பணி வழங்கக்கோரி ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் பல்கலைக்கழக உணவகத்தில் சமையல் பணியின்போது கொதிக்கும் எண்ணெய் காலில் கொட்டியதால் ஒரு காலை இழந்து மாற்றுத்திறனாளியான ராமு (43) என்ற ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டாா். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் ராம் சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இந்நிலையில் ராமுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்பட்ட136 பணியாளா்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலரும் (பொறுப்பு) மாமன்ற உறுப்பினருமான டி. குமரவேல் தலைமை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் டி. நாகராஜன் தொடங்கி வைத்துப்பேசினாா். செயலா் பி. வீரமணி, வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், செயலா் டி. செல்வா, மாணவா் சங்க மாவட்டத் தலைவா் க. பாலமுருகன், செயலா் எஸ்.வேல்தேவா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா நிறைவுரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாலிபா் சங்க மாணவா் சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.