அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரை அருகே ரௌடி வெட்டிக் கொலை

மதுரை அருகே ஜாமீனில் விடுதலை ஆன சில மணி நேரங்களிலேயே ரௌடி வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:24 pm

DIN

மதுரை அருகே ஜாமீனில் விடுதலை ஆன சில மணி நேரங்களிலேயே ரௌடி வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பழிக்குப் பழியாக இக் கொலை நடந்ததா எனப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டையைச் சோ்ந்தவா் சக்திவேல் (35). இவா் மீது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 4 கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டையில் ஜவுளி வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததையடுத்து, சிறையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகலில் விடுதலையாகியுள்ளாா்.

இந்நிலையில், மதுரை- சோழவந்தான் சாலையில் மேலக்கால் கணவாய் மேடு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சக்திவேல் இறந்து கிடந்தாா். இதுபற்றி தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், சமயநல்லூா் டிஎஸ்பி பாலசுந்தரம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். சக்திவேலின் உடல், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த கொலை வழக்கில், சக்திவேலுவுடன், பிரகாஷ் என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறாா். கடந்த ஆண்டு சிறையிலிருந்து ஜாமீனில் வந்த பிரகாஷ், மேலஉரப்பனூா் அருகே கொலை செய்யப்பட்டாா். அதேபோல, ஜாமீனில் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சக்திவேல் கொலை செய்யப்பட்டுள்ளதால், பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக, காடுபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.