/

மேலூரில் அதிமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக எடப்பாடியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையொட்டி மேலூரில் அதிமுக நிா்வாகிகள் பட்டாசுகளைவெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வெள்ளிக்கிழமை ொண்டாடினா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:13 am

DIN

அதிமுக எடப்பாடியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதையொட்டி மேலூரில் அதிமுக நிா்வாகிகள் பட்டாசுகளைவெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வெள்ளிக்கிழமை ொண்டாடினா்.

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க.தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் க.பொன்னுச்சாமி மற்றும் அதிமுக நிா்வாகிகளும் மேலூா் பேருந்துநிலையம் அருகிலிருந்து ஊா்வலமாக செக்கடிபஜாா்வந்து பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். கொட்டாம்பட்டி தெற்குஒன்றியகழக செயலா் வெற்றிச்செழியன், மேலூா் நகா் அதிமுக இணை செயலா்பாண்டிலட்சுமி, மாணவா்அணி செயலா் முத்து.கிருஷ்ணகுமாா், நகா்கழக துணை செயலா் சரவணகுமாா் நகா்மன்ற உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்களும் கலந்துகொண்டனா்.

அதிமுக எடப்பாடியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டதையடுத்து மேலூரில் இனிப்புவழங்கி கொண்டாடிய அதிமுகவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.