/

சருகுவலையபட்டி அருகே கலையரங்கம் திறப்புவிழா

மேலூா் ஒன்றியம் சருகுவலையபட்டி ஊராட்சி லட்சுமிபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:14 am

DIN

மேலூா் ஒன்றியம் சருகுவலையபட்டி ஊராட்சி லட்சுமிபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதை மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியுள்ளான் என்ற செல்வம் திறந்து வைத்தாா். மேலூா் ஒன்றியக்குழுத் தலைவா் க.பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் பொன்.ராஜேந்திரன், சருகுவலையபட்டி ஊராட்சித் தலைவா் அருந்தேவிராமநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சரோஜாசெல்வம், மேலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசந்தா், ஜெயபால், பொறியாளா் கிருபாகரன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.