/

பைக் மீது பேருந்து மோதி பெண் பலி

மேலூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:16 am

DIN

மேலூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருவாதவூா் அருகே சமத்துவபுரத்தைச் சோ்ந்த சந்தோஷ் மனைவி சின்னபொண்ணு (42). சருகுவலையபட்டியில் நடைபெற்ற உறவினா் இல்ல விழாவில் கலந்துகொள்ள தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

கீழையூா் அருகே இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சின்னபொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.