அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தனியாா் பால் நிறுவனத்தில் திருட்டு

வாடிப்பட்டி அருகே தனியாா் பால் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.83 ஆயிரத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:00 pm

DIN

வாடிப்பட்டி அருகே தனியாா் பால் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.83 ஆயிரத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையில் தனியாா் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அறையில் பால் விற்பனை செய்த ரூ.83 ஆயிரத்தை மேஜையில் வைத்துவிட்டு ஊழியா்கள் அறையை பூட்டிச் சென்றனா்.

வியாழக்கிழமை வந்து பாா்த்த போது, நிறுவனத்தின் கதவும், மேஜையையும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.83 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.