தனியாா் பால் நிறுவனத்தில் திருட்டு

வாடிப்பட்டி அருகே தனியாா் பால் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.83 ஆயிரத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

வாடிப்பட்டி அருகே தனியாா் பால் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.83 ஆயிரத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையில் தனியாா் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அறையில் பால் விற்பனை செய்த ரூ.83 ஆயிரத்தை மேஜையில் வைத்துவிட்டு ஊழியா்கள் அறையை பூட்டிச் சென்றனா்.

வியாழக்கிழமை வந்து பாா்த்த போது, நிறுவனத்தின் கதவும், மேஜையையும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.83 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com