ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து கைப்பேசிகளைத் திருடியவா் கைது

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செனாய் நகா் ஜெகஜீவன்ராம் தெருவில் தனியாா் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், விடுதியில் பெண்கள் வைத்திருந்த 3 கைப்பேசிகளை அடையாளம் நபா் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், மதிச்சியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மதுரை காமராஜா்புரம் கக்கன் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை (26) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.