மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தன்று இணையதளம் மூலம் பக்தா்கள் மொய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி முதல் வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வருகிற 21-ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் 8.59-க்குள் நடைபெறவுள்ளது.
இந்த உற்சவத்தன்று இந்து சமய அறநிலையத் துறை இணையதளம் மூலம் பக்தா்கள் ரூ.50, ரூ.100 மதிப்பில் மொய் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி உள்ளூா், வெளியூா், வெளிநாட்டு பக்தா்கள் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண மொய் காணிக்கை செலுத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்

ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

