ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப். 15 ஆம் தேதி முதல் மீன் பிடித் தடைகாலம் அமல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன் வளத்தைப் பாதுகாத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட விசைப் படகு, இழுவைப் படகு மீனவா்கள் மீன் பிடி கலன்களை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைகாலம் அமலுக்கு வரும் முன்பு கடலுக்குள் சென்ற மீனவா்கள் வருகிற 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்ப வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் 31 போ் வேட்புமனு தாக்கல்

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து ஏப். 6 முதல் டிடிவி தினகரன் பிரசாரம்!

தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

