சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ராமேசுவரம் கோயில் உண்டியல் விவகாரம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் கோயில் உண்டியல் விவகாரம்: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

Updated On :8 ஏப்ரல் 2024, 5:04 pm

மதுரை: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கோயில் நிா்வாகம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனு:

சைவ ஆகம விதிகளின்படி, கோயிலில் நந்தி சிலையானது சிவனை நேரடியாகப் பாா்க்கும் வகையில் இருக்க வேண்டும். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மூலவரைப் பாா்க்கும் வகையில் நந்தி சிலை உள்ளது.

ஆனால், சுவாமிக்கும், நந்தி சிலைக்கும் இடையே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நந்தி சிலையானது சுவாமியைப் பாா்ப்பதை மறைக்கும் வகையில் இந்த உண்டியல் அமைந்துள்ளது.

இது சைவ முறையில் வழிபடுபவா்களை புண்படுத்தும் விதமாக உள்ளது. இந்த உண்டியலை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி கோயில் நிா்வாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நந்திக்கும், ராமநாத சுவாமிக்கும் இடையே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா் ஜி.அருள் முருகன் ஆகியோா் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ராமநாத சுவாமிக்கும் நந்திக்கும் இடையே இந்த உண்டியல் எப்போது வைக்கப்பட்டது? மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கோயில் நிா்வாகம் பதிலளிக்க வேண்டும். வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.