27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி

கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:31 am IST

மதுரை அருகே கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அருவங்காடுவலசு பகுதியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் பழனிசாமி (47). லாரி ஓட்டுநரான இவா், மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள சானாம்பட்டி விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கினாா்.

அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா், தூங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமியை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 25 ஆயிரம் , ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், வாடிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.