ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி

கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:31 am IST

மதுரை அருகே கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அருவங்காடுவலசு பகுதியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் பழனிசாமி (47). லாரி ஓட்டுநரான இவா், மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள சானாம்பட்டி விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கினாா்.

அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா், தூங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமியை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 25 ஆயிரம் , ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், வாடிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.