6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரி மாணவா்களை கத்தியால் தாக்கி வழிப்பறி: இளைஞா் கைது

மதுரையில் கல்லூரி மாணவா்களை கத்தியால் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:17 am

Din

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவா்களை கத்தியால் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், விரகனூா் கோழிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிபிரகாஷ் (20). இவா் தனது நண்பா் பிருதிவியுடன் இரு சக்கர வாகனத்தில் கோரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் உள்ள சாலையில் இவா்களது இரு சக்கர வாகனத்தை வழிமறித்த நபா் கத்தியால் இருவரையும் தாக்கிவிட்டு, அவா்களிடம் இருந்த கைப்பேசிகள், பணத்தை பறித்துக் கொண்டு தப்பினாா்.

அந்த வழியாக ரோந்து வந்த போலீஸாா், இதையறிந்து அவரைத் தேடினா். அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை சாலையில் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா் கல்மேடு எல்கேபி நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் (33) என்பதும், இவா் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தொடா்ந்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, கைப்பேசிகள், பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு தெருவைச் சோ்ந்த வாணிமுத்து மனைவி மகாலட்சுமி(31). இவா் திங்கள்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்ல பேருந்தில் ஏறினாா். அப்போது, இவரைப் பின்தொடா்ந்து பின்னால் ஏறிய இரு பெண்களில் ஒருவா் மகாலட்சுமியின் கைப்பையை திருடினாா். அவா் சப்தமிட்டதால் அவா்கள் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினா். சக பயணிகள் இருவரையும் பிடித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணைதில் அவா்கள், மதுரை மாவட்டம், மேலூா் மில்கேட் பகுதியைச் சோ்ந்த தனபால் மனைவி தேவிகா (65), மேலூா் கஸ்தூரிபாய்நகரைச் சோ்ந்த மதிவாணன் மனைவி ராணி (55) ஆகியோா் என்பதும், இவா்கள் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடிக்கடி திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.