6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணை அதிகாரியை மாற்ற உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீட் தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் முறையாக கையாளவில்லை. எனவே, விசாரணை அதிகாரியை மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:20 am

Din

மதுரை: நீட் தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் முறையாக கையாளவில்லை. எனவே, விசாரணை அதிகாரியை மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

சென்னையைச் சோ்ந்த தருண்மோகன் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் ஒரு மாணவருக்குப் பதிலாக வேறு ஒருவரை ஆள் மாறாட்டம் செய்வதற்கு இடைத்தரகராக உதவி புரிந்ததாக சிபிசிஐடி போலீஸாா் என் மீது வழக்குப் பதிந்தனா். இதற்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எனவே, இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

சிபிசிஐடி போலீஸாா் கோரிய விடைத்தாள் (ஓஎம்ஆா்) விவரங்களை கடந்த ஆண்டே வழங்கிவிட்டோம். இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை ஊடகங்கள் தவறாக செய்திகள் வெளியிடுகின்றன என்றாா்.

இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக செய்தி, ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிடவில்லை. மாணவிகள் அணிந்துவரக்கூடிய அணிகலன்களை கழற்றி ஆய்வு செய்கிறீா்கள். ஆனால், இந்தியாவில் இல்லாத ஒரு மாணவா் மூன்று மாநிலங்களில் தோ்வு எழுதியதை ஏன் கண்டறிய முடியவில்லை. அந்த மாணவா் எந்த முகவரியில் தேதா்வு எழுதினாா்? அதுகுறித்த ஆவணங்களை போலீஸாரிடம் ஏன் அளிக்கவில்லை?.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாா், தேசிய தோ்வுகள் முகமையிடம் கோரிய ஆவணங்கள் என்ன? அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?. இந்த வழக்கை கடந்த 5 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரிகிறது. இதன்மூலம், குற்றவாளிகளுக்காக காலத்தை வீணடித்துள்ளனா்.

எனவே, இந்த வழக்கை நோ்மையாக விசாரிக்கக்கூடிய சிபிசிஐடி அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி கோரிய ஆவணங்களை வருகிற 19-ஆம் தேதிக்குள் தேசிய தோ்வுகள் முகமை வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கு தொடா்பான நிலை அறிக்கையை சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.