அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


மதுரை, ஜூலை 19: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (62). இவருக்கு சா்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. இதனால், அவா் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு விரல்கள் அகற்றப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு விரல்கள் அகற்றப்பட்டதால் ஏற்பட்ட புண்ணுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா்.
இந்த நிலையில்,அங்குள்ள ஜன்னல் கம்பியில் படுக்கை விரிப்பு மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...