ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிரை வண்ணாா் சமூகத்தினா் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கு அந்த சமூகத்தினா் உரிய தகவல்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், புதிரை வண்ணாா் சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிவதற்காக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்தப் பணிக்காக இப்சோஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரகம் நியமித்துள்ளது.
இந்த நிறுவனம் துறை அதிகாரிகள், புதிரை வண்ணாா் நல வாரிய உறுப்பினா்கள், அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. கணக்கெடுப்புக் குழு ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று கிராம, குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்துகின்றனா்.
நேரடியாக சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள், தரவுகள், புதிரை வண்ணாா் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவா்களுக்கான எதிா்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த கணக்கெடுப்புப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் வரும் போது, புதிரை வண்ணாா் சமூக மக்கள் உரிய தகவல்களை அளித்து கணக்கெடுப்புக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அனைத்துத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்: 150 போலீஸாா் பாதுகாப்பு

மாா்ச் 23-இல் குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

