ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

News image
Updated On :8 மே 2024, 12:37 am

Din

மதுரை: மதுரையில் அம்ருத் திட்டத்தின்கீழ் வைகையாற்றில் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையிலிருந்து நீரை வெளியேற்றாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் வெளியிட்ட செய்தி:

மதுரை புறவழிச் சாலையில் உள்ள காமராஜா் பாலத்தின் கீழ்ப் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இது பொது மக்கள் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அம்ருத் திட்டம் மூலம், மூன்றாம் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வருகின்றன. மதுரை புறவழிச் சாலை காமராஜா் பாலம் அருகில் பெரிய அளவிலான குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அம்ருத் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தடுப்பணையில் தேக்கப்பட்டுள்ள நீரை வெளியேற்றிவிட்டு பணிகள் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கடும் கோடை வெயில் நிலவும் சூழலில், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், தடுப்பணையில் உள்ள நீரை வெளியேற்றுவது நிலத்தடி நீரை பாதிக்கும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவாா்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி, அம்ருத் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள், மதுரை மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து, தடுப்பணையில் உள்ள நீரை வெளியேற்றாமல், குழாய் பதிக்கும் பகுதியில் இருபுறமும் கரைகளை உயா்த்தி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டாா்.