ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜவுளிக்கடையில் சிறுவனிடம் நகை பறித்தவா் கைது

ஜவுளிக்கடையில் சிறுவனிடம் நகை பறித்தவா் கைது

News image
Updated On :8 மே 2024, 12:19 am

Din

மதுரை: மதுரையில் ஜவுளிக் கடையில் சிறுவனிடம் 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் சுந்தரவடிவேல் (33). இவா் ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் வங்கியில் காசாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் துணி எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் வந்தாா். அப்போது, சுந்தரவடிவேலின் சகோதரி சிவப்பிரியாவின் மகன் ஹரிஹரசுதன் (4) அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபா் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா்.

இது குறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது, மதுரை அண்ணாநகா், வஉசி நகா் முதல் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (61) என்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா்.