பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்சுழி அருகே ஜல்லிக்கட்டு: 3 போ் காயம்

News image
Updated On :15 மே 2024, 10:24 pm

Manivannan.S

விருதுநகா் மாவட்டம்,திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டியில் 3 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனாா் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியை அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் வள்ளிக் கண்ணு தொடங்கி வைத்தாா். இதில் விருதுநகா், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

முதலில் கோயில் சாா்பாக காளை அவிழ்த்துவிடப்பட்ட பிறகு, அடுத்தடுத்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 25 போ் வீதம் 250 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா்.

சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு பீரோ, கட்டில், ஏா் கூலா், மின் விசிறி, ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.

காளைகள் முட்டியதில் 3 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்குள்ள தற்காலிக மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.