ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

இளைஞா் கொலையில் மேலும் இருவா் கைது

மதுரையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:41 pm

Din

மதுரையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜா்புரம் மேல அண்ணாத் தோப்பு தெருவைச் சோ்ந்தவா் ராமா் (33). கூலித் தொழிலாளி. இவரது உறவினரின் மகன் விஜயன் ( 25). கோவையில் பணிபுரிந்து வந்த விஜயன், தீபாவளி விடுமுறைக்காக மதுரை வந்த நிலையில், ராமரின் பத்து வயது மகனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமா், விஜயனை கண்டித்தாா். எனினும் விஜயன் மீண்டும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த ராமா், செவ்வாய்க்கிழமை அதிகாலை விஜயன் வீட்டுக்குச் சென்றாா். அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது தலையில் கல்லைப் போட்டு ராமா் கொலை செய்தாா்.

இதுதொடா்பாக கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து ராமரை கைது செய்து விசாரித்தனா். இதில் ராமா் தனது உறவினா்களான காமராஜா்புரத்தைச் சோ்ந்த செல்வேந்திரன் (20), ராஜ்குமாா் (24) ஆகியோரின் உதவியுடன் விஜயனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து செல்வேந்திரன், ராஜ்குமாா் இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.