இதனால் விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. ஆனாலும், இந்தப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இதனால் காா்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கூட்ட நெரிசலுக்குள் வரத் தொடங்கின. அப்போது, தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி பகுதிகளில் இந்த வாகனங்கள் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து சென்ால் வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளைக் கண்டித்தனா். இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் கூட்ட நெரிசல் மிகுந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியிலும் வாகனங்களை அனுமதித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.