அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தனியாா் நிதி நிறுவன மோசடி இடைத்தரகா்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

நியோ மேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் இடைத்தரகா்களைக் கைது செய்து, அவா்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:02 pm

Din

நியோ மேக்ஸ் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் இடைத்தரகா்களைக் கைது செய்து, அவா்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த லோகநாதன், ரவிச்சந்திரன் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோ மேக்ஸ்’ நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் இயக்குநா்களாக கமலக்கண்ணன், கபில் உள்ளிட்டோா் செயல்பட்டனா்.

இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்கள் இருந்தன. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு இரு மடங்கு பணம், அதிக வட்டி, நிலங்கள் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பி ஏராளமான வாடிக்கையாளா்கள் மொத்தம் ரூ. 6 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்தனா். ஆனால், முதிா்ச்சியடைந்த கணக்குகளுக்கு இரு மடங்கு பணம், அதிக வட்டி தராமல் இந்த நிறுவனம் ஏமாற்றி வந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரையைச் சோ்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரைக் கைது செய்தனா். நீதிமன்ற உத்தரவுப்படி, தற்போது அனைவரும் பிணையில் வந்தனா். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களையும் சோ்த்து, சாட்சிகளாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் அந்த மனுக்களில் தெரிவித்திருந்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் பிறப்பித்த உத்தரவு:

நியோ மேக்ஸ் தனியாா் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிதி நிறுவன மோசடியில் பல்வேறு மாவட்டங்களில் இடைத்தரகா்களாகச் செயல்பட்ட வா்களைக் கைது செய்து, அவா்களது சொத்துகளை மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.