மதுரை மாட்டுத்தாவணி நுழைவு வாயில் விவகாரம்: ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் - உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரா் நுழைவு வாயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்த தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எச்சரித்தது.










