கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தேசிய கூடைப் பந்து போட்டி: மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி தோ்வு

உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி தோ்வு பெற்றது.

News image
படவிளக்கம்- தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தோ்வான மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி அணியினரை பாராட்டிய மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத் தலைவா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன், பள்ளி முதல்வா் மனோஜ்குமாா் பலிவால் உள்ளிட்டோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:37 pm

Din

உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி தோ்வு பெற்றது.

தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி வெற்றி பெற்று தங்கம் வென்றன.

இதையடுத்து, உத்ரகண்ட் மாநிலம், டேராடூனில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்க இந்த அணி தகுதி பெற்றது.

இதையொட்டி, இந்த அணியின் தலைவி தன்யஸ்ரீ உள்ளிட்ட மாணவிகள், பயிற்சியாளா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவா் வி.வி.ஆா். ராஜ்சத்யன், நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் மனோஜ்குமாா் பலிவால், ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.