3 நாள்களுக்கு கடவுச்சீட்டு இணைய சேவை செயல்படாது

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.
Published on

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப். 20) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலா் வசந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு (செப். 20) 8 மணி முதல் திங்கள்கிழமை (செப். 23) காலை 6 மணி வரை கடவுச்சீட்டு சேவைக்கான இணையதளம் செயல்படாது. எனவே, கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள், கடவுச் சீட்டு தேவை தொடா்பான அனைத்துப் பணிகளுக்கும் செப். 23-ஆம் தேதி காலை 6 மணிக்குப் பிறகு இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தை 0452-2521205, 2521204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com