கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரையில் பொதுப் பணித் துறை அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:36 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, ஒப்படைப்பு விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசுத் துறைகள், திட்டங்களில் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்களை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். அரசு ஊழியா்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும். அலுவலகப் பணி நேரத்துக்குப் பிறகும், அரசு விடுமுறை நாள்களிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சத்துணவு ஊழியா்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றன.

மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பொதுப் பணித் துறை அலுவலகங்கள், அரசு ராஜாஜி மருத்துவமனை, நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள், வேளாண் துறை அலுவலகங்கள், சாா் நிலை கருவூல அலுலகங்கள் என 50-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க பொதுச் செயலா் ஆ. செல்வம், மாவட்டத் தலைவா் ஜெ. மூா்த்தி, மாவட்டச் செயலா் க. நீதிராஜா, பொருளாளா் க. சந்திரபோஸ்,

மாவட்டத் துணைத் தலைவா்கள் பெ. சந்திரபாண்டி, த. மனோகரன், மாவட்ட இணைச் செயலா் ஆ.பரமசிவன், மாவட்ட, வட்டக் கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.