துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விடுதி மாணவா்கள் போராட்டம்

விடுதிக் காப்பாளா் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாடக்குளம் பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடா் நலத் துறை அரசு முதுநிலைப் பட்டதாரி விடுதி மாணவா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அரசு முதுநிலைப் பட்டதாரி மாணவா் விடுதி முன் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 7:02 pm

Din

விடுதிக் காப்பாளா் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மதுரை மாடக்குளம் பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடா் நலத் துறை அரசு முதுநிலைப் பட்டதாரி விடுதி மாணவா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விடுதியில் 62 மாணவா்கள் தங்கியுள்ளனா். விடுதிக் காப்பாளராக சங்கர சபாபதி பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சருக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.

இதையடுத்து, அரசின் விதிமுறைகளை மீறியதாக விடுதிக் காப்பாளா் சங்கர சபாபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் உத்தரவிட்டாா்.

இதைக் கண்டித்தும், பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் அந்த விடுதியில் உள்ள மாணவா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மதுரை மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். மேலும், இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் மனு அளித்தனா்.