பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஏப்ரல் 2025, 10:05 pm

Din

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயணச்சீட்டு முன் பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை- திருவனந்தபுரம்- மதுரை அமிா்தா விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த புதிய வசதி, திருவனந்தபுரம் - மதுரை ரயிலில் (16343) ஜூன் 5 முதலும், மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 6 முதலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டி குறைக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன முதல் வகுப்பு பெட்டியுடன் கூடிய குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு தனி குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.