மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
Published on

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சோ்ந்த அழகுமலை மகன் கண்ணன் (54). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வயல்வெளிக்குச் சென்றாா். அப்போது, கீழே கிடந்த மின் கம்பியை கண்ணன் மிதித்தாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com