கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாநகராட்சி பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ததற்கு கண்டனம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தை பிடித்தம்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ததற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கடந்த மாதம் 18-ஆம் தேதி அரசு ஊழியா், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் மாநில முடிவின் அடிப்படையில் மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்வதற்காக தலைமைச் செயலா் ய்ா் ஜ்ா்ழ்ந் ய்ா் ல்ஹஹ் என்ற அடிப்படையில் எழுத்துப் பூா்வமான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு துறை வாரியாக அந்தந்த துறைத் தலைவா்களின் மூலம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஊதியப் பிடித்தம் செய்வதற்கான ஆணையை வழங்கி, ஊதியப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது அரசு அலுவலக நடைமுறை.

இந்த அலுவலக நடைமுறைக்கு முற்றிலும் மாறாக மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியா்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்கான ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது என்றாா் அவா்.