டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராமக் குழு நடத்தக் கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராமக் குழு மூலம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவனியாபுரம் கிராமக் குழுவைச் சோ்ந்த எம். ராஜ்குமாா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

அவனியாபுரத்தில் பன்னெடுங்காலமாக ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு, எந்தவித ஜாதி, மத வேறுபாடும் இல்லாமல் மக்கள் வசித்து வருகின்றனா். ஏராளமான இளைஞா்கள் இங்கு காளை வளா்ப்பிலும், மாடுபிடி பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனா்.

பொது விழா என்ற அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம மக்களும், இளைஞா்களும் இணைந்து கிராமக் குழு மூலம் நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.