6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நல்லோசை களமாடு’ போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகள், கலைக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் புதன்கிழமை பரிசளித்தாா்.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகளில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா். உடன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராமகிருஷ்ணன்.
Updated On :24 டிசம்பர் 2025, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகள், கலைக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் புதன்கிழமை பரிசளித்தாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், சமூக நீதி கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் ‘நல்லோசை களமாடு’ பல்திறன் போட்டிகள் கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெற்றன.

பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைக் கருவி இசைத்தல், ஓரங்க நாடகம், ஓவியம், பிரசுரங்கள் உருவாக்குதல், கவிதை, கதை எழுதுதல், கேரம், சதுரங்கம், குழு விளையாட்டுப் போட்டிகளாக பூப்பந்து, கைப்பந்தாட்டம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 388 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், 223 போ் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இவா்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அளித்தாா்.

இதில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராமகிருஷ்ணன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.