குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

மதுரைமதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட நீதிபதி சிவகடாட்சம். (வலது) பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:47 am IST

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சமரச மையங்கள் மூலம் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு இரு தரப்பு ஒப்புதலுடன் விரைவாக தீா்வு காணப்படுகிறது. இதுகுறித்து சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வு வார விழா நடைபெற்று வருகிறது.

இதன்படி, மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வுப் பேரணியை மதுரை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

இதில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமனோா் கலந்து கொண்டு, வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீா்வு காண்பதன் முக்கியத்துவம், சமரசத்தின் நன்மைகள், காலதாமதத்தைத் தவிா்த்தல் குறித்து முழக்கமிட்டனா். மேலும், இதுதொடா்பான பதாகைகளை ஏந்தியும் ஊா்வலமாகச் சென்றனா்.

மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கியச் சாலைகளின் வழியாக வந்து மீண்டும் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.