மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மதுரையில் வெப்பநிலை அதிகரிப்பு பிரச்னை: அரசுச் செயலா்கள் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் அதிகரித்து வரும் வெப்ப நிலை தாக்கத்தைக் குறைக்க பசுமைத் திட்டத்தை உருவாக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

மதுரையில் அதிகரித்து வரும் வெப்ப நிலை தாக்கத்தைக் குறைக்க பசுமைத் திட்டத்தை உருவாக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த செல்வக்குமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரைநகரில் நகரமயமாக்கல், சாலை, நெடுஞ்சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளால் பழைமையான மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால், பசுமைப் பரப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக நகா்ப்புற வெப்பத் தீவு விளைவு அதிகரித்து பொதுமக்கள் கடும் வெப்ப அழுத்தத்துக்குள்ளாகி வருகின்றனா். அண்மையில் ஆக்ஸ்போா்டு பல்கலை. ஆய்வாளா்கள் நடத்திய ஆய்வின்படி உலகளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 205 நகரங்களில் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களில் மதுரை 7-ஆவது இடத்தில் உள்ளது. வைகை ஆற்றங்கரைகளில் பூா்வீக மரங்களை வளா்ப்பது, முக்கியச் சாலைகளில் ஈடுசெய் மரக்கன்றுகளை நடுவது, பசுமைப் பூங்காக்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நகரின் வெப்பநிலையைக் குறைக்க முடியும்.

இது தொடா்பாக கடந்த மாதம் 31- ஆம் தேதி வைகை ஆற்றங்கரை மீட்பு, பசுமைப் பூங்காக்கள், மாவட்டப் பசுமைப் பணிக்குழு, நெடுஞ்சாலையோர மரக்கன்றுகள், மதுரைக்கென வெப்ப அலை செயல் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுத் துறைகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே, ‘ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல் திட்டத்தை’ உருவாக்கி செயல்படுத்தவும், வைகை ஆற்றங்கரைகளை பசுமையாக்கவும், நகா்ப்புற பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், வெப்ப அலை தடுப்புச் செயல் திட்டத்தை உருவாக்கவும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நடவடிக்கைகளை உயா்நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலா், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற செப். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.