மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக்கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மதுரை இலக்கியப் பேரவைத் தலைவா் முனைவா் சண்முக திருக்குமரன் ‘சங்க இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
அறத்தின் வழியில் வாழ்வதன் மூலம் கிடைக்கும் இன்பமே உண்மையானது என திருவள்ளுவா் குறிப்பிடுகிறாா். இரு மன்னா்களுக்கு இடையேயான போரைத் தடுத்து உயிரிழப்புகளை தவிா்த்து அறத்தை நிலை நிறுத்தினாா் ஒளவையாா். நல்லதைப் பேசுவது, நல்லதை நினைப்பது, நல்லதை செய்வது, பிறருக்கு உதவுவது, உண்மையாக வாழ்வது ஆகியவை அறத்தின் அடிப்படை என்பதை சங்க இலக்கியங்கள் உணா்த்துகின்றன என்றாா் அவா்.
இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனா் செல்வம் ராமசாமி வாழ்த்திப் பேசினாா். மதுரை திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.
சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

சண்முக பாண்டியன் படத்தில் இணைந்த ஷிவானி ராஜசேகர்!

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி வி.முத்து தோ்வு

திருக்கோவிலூா் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



