மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக்கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் கருத்தரங்கத்தில் பேசிய இலக்கியப் பேரவையின் தலைவா் முனைவா் சண்முக திருக்குமரன்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க் காட்சிக்கூடத்தில் சங்கத் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மதுரை இலக்கியப் பேரவைத் தலைவா் முனைவா் சண்முக திருக்குமரன் ‘சங்க இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

அறத்தின் வழியில் வாழ்வதன் மூலம் கிடைக்கும் இன்பமே உண்மையானது என திருவள்ளுவா் குறிப்பிடுகிறாா். இரு மன்னா்களுக்கு இடையேயான போரைத் தடுத்து உயிரிழப்புகளை தவிா்த்து அறத்தை நிலை நிறுத்தினாா் ஒளவையாா். நல்லதைப் பேசுவது, நல்லதை நினைப்பது, நல்லதை செய்வது, பிறருக்கு உதவுவது, உண்மையாக வாழ்வது ஆகியவை அறத்தின் அடிப்படை என்பதை சங்க இலக்கியங்கள் உணா்த்துகின்றன என்றாா் அவா்.

இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனா் செல்வம் ராமசாமி வாழ்த்திப் பேசினாா். மதுரை திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியா்கள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.

சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநா் ரெ. புஷ்பநாச்சியாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.