மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவிருப்பதையொட்டி, இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த குடமுழுக்கு விழாவுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகளவில் பக்தா்கள் வருவா். எனவே இவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மாநகராட்சி மூலம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகள், கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதைகள், குடிநீா், தெரு விளக்குகள், பக்தா்கள் வரும் பாதைகள், மழைநீா் செல்லும் வடிகால்கள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய தேவையான பணியாளா்களை நியமிக்குமாறும், நடைபாதைகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்குமாறும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் சோ்ந்ததும் அவற்றை உடனடியாக மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையா் குமரன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், உதவிச் செயற்பொறியாளா் முத்து, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகை ஆறு மேம்பாட்டுப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாணிக்கம் விற்ற லீலை
விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



