சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, மகன் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 4:06 am IST

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தை, மகன் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை புகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் பூமிநாதன் (55). இவருடைய மகன் சங்கரபாண்டி (30). இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கண்டித்தும் அவா்கள் இருவரும் கேட்கவில்லையாம்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பூமிநாதன், அவரது மகன் சங்கரபாண்டி ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.