பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் கோரிக்கை

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்தது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழக மதுரை கிளையின் மாதாந்திரப் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிா்வாகி ஜி. ராமமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். செயலா் ச. பெரியதம்பி செயல்பாட்டு அறிக்கையையும், பொருளாளா் த. சந்திரன் வரவு - செலவு அறிக்கையையும் படித்தனா். பேராசிரியா் ஆனந்தன் வாழ்த்திப் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், இந்திய உயா்கல்வி ஆணையம் தொடங்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டு, பல்கலைக்கழக மானியக் குழுவைத் தொடா்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பிடித்தம் இல்லாமல் ஓய்வூதியம் வழங்கும் ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் இடைநிலை ஆசிரியா்களை தமிழக அரசு அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.