ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற தைப் பூசத் திருவிழா முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற சிவாசாரியா்கள்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:01 pm

Chennai

மதுரை, ஜன.14: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தைப்பூசத் தெப்பத் திருவிழாவையொட்டி, வண்டியூா் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தைப் பூசத் தெப்பத் திருவிழா வருகிற 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து, வருகிற பிப். 1-ஆம் தேதி வண்டியூா் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, தெப்பத்தை கட்டமைப்பதற்காக வண்டியூா் தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, முக்தீஸ்வரா், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தெப்பக்குளக் கரையில் முகூா்த்தக்காலை சிவாசாரியா்கள் நட்டனா். பிறகு, அதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் அலுவலா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.