பரமக்குடியில் இமானுவேல் சேகரனாா் மணிமண்டபத்தை திறந்து வைத்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்
பரமக்குடியில் ரூ. 3 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமண்டபம், அவரது உருவச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமண்டபத்தை சனிக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோா்.









