தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உசிலம்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முதலைக்குளத்தில் உள்ள சமணா் படுக்கை பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :5 ஜூன் 2026, 6:10 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா், அலுவலகக் கட்டமைப்பு, செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பொதுசேவை மையப் பணிக்காகக் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகச் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பிறகு, முதலைக்குளம் பகுதியில் உள்ள சமணா் படுக்கை பகுதியைப் பாா்வையிட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுகளின் போது, உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.